மேற்குவங்க முதல்வரும், திரி ணாமுல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா பானர்ஜி கொல் கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களி டம் கூறுகையில், “நாட்டிலேயே மிகப் பெரும் ஜேப்படி திரு டர்கள் (பிக்பாக் கெட்) பாஜகவினர்தான். அதனால்தான் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். ரூ.15 லட்சம் ஒவ்வொருவரின் கணக்கிலும் வரவு வைப்பதாகச் சொன்னது, பண மதிப்பிழப்பு, கொரோனா காலத்தில் இலவச ரேசன் பொருள்களை நிறுத்தியதை எல்லாம் மறக்க முடியுமா? பொய்யான வாக்குறுதிகள் அளித்து அதை நிறைவேற்றுவதாக மக்களை தொடர்ந்து நம்பச் செய்கிறார்கள் பாஜக வினர். வேலை அட்டை என்ற பெயரிலான மோசடிக்காக உத்தரப்பிரதேச அர சிற்கு பெரிய அளவிலான தொகை வழங் கப்படுகிறது. ஆனால் மேற்குவங்கத்தில் 100 நாள் வேலைக்கான தொகை நிலுவை யில் உள்ளது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய புலனாய்வு முகமைகள் மேற்குவங்க மாநிலத்துக்கு அடிக்கடி வருவது பாஜகவுக்கு அரசி யல் தீனி தருவதற்காகத் தான்” என்று கூறி யுள்ளார்.